Wednesday, January 6, 2010

நம்மில் நாம்....






நீல வானிலும் உனது பின்பம்!!
முதல் நொடி....
சூறாவளி கூட சுகமான தென்றலாய்!!
இரண்டாம் நொடி...
இரண்டடி வெண்பாவும்
முழு நீல கட்டுரையை!!
மூன்றாம் நொடி...
மேகங்களின் கால்களில்
மழை துளி கெஞ்சுவது போல உன் அழகில் நான்.!!.
நான்காம் நொடி....
என் இரு பாதங்கள்
நிலவில் பதித்தது போல!!
ஐந்தாம் நொடி...
இவை யாவும் நாம் இணைந்து
சென்ற அந்த தண்ட வாள தெருவில்
என்னுள் மொழி பெயர்ந்தன அந்த ஐந்து வினாடியில்....

-->sahana

உன்னை மறக்க .....





அவள் உனதில்லை
நீ எனது இல்லை...
என பல ஆயிரம்
முறைகள் எனை திருத்தியும்
என் சொற்களில் படிந்து போன
உன் நினைவுகள்..


உன் கண்களில்
மோதி விட கூடாது
என்று எவ்வளவு முயன்றாலும்
இருனதியில் சரணடைவது என்னவோ
உன் விழி ஆலயத்தில் தான்..

குப்பைக்கு சென்றாலும்
மணம் வீசும் பூவை போல நானும்...
விதி யாரை விட்டது..
எனினும்
உன் விழி உன்னை விடாது..

உன் பேர் சொல்ல ஆசை தான்..
ஊருக்கெல்லாம் மேடை போட்டு அல்ல..
எனக்கே கேட்காமல்....
செல்லமாய் ...
ரகசியமாய்...

உன் தோள்களில் தேய ஆசை தான்...
வாழ்நாள் முழுக்க அல்ல...
என் கண்ணீரின் முதல் சொட்டு
உன்னை நனைக்கும் வரை மட்டுமாவது..
இவைகளுக்கு பிறகும்
எங்கனம் உன்னை மறக்க?????

-->sahana

ஆசைப்பட்டேன்..




காலையில்
துயில் எழும்போது
என் அருகில்
உன் முகம் காண ஆசைப்பட்டேன்..

சடை பின்னி
போட்டு இட்டு
உன் கண்கள் சொல்லும்
விமர்சனம் கேட்க
ஆசைப்பட்டேன்....

தனியே வந்தாலும்
என் தோள்களில்
உன் கைகள் இருக்க
ஆசைப்பட்டேன்....

வந்து செல்லும்
கடல் அலையை
உன் தோல் சாய்ந்து ரசிக்க
ஆசைப்பட்டேன்...

முட்டி கொண்டு
அழுதாலும்
உன் மார்பில் மோதி அழ
ஆசைப்பட்டேன்...

என்னை எனக்காக
ஏற்று காதலிக்க
அவன் எங்கே ?????

புதிர் தான் நீ..

அமாவாசை இருட்டில்
கூட
உன் கண்களை என்னால்
கண்டறிய கூடும்...
என் அன்பே...!
உன் இதய செய்திகளை
மட்டும் ஏனோ
கண்டு கொள்ள இயலவில்லை!!


--sahana

நேரம் இருந்தது !!!








என் விரல்களுக்கு
நேரம் இருந்தது
உன்னை பற்றி
புகழ...

என் கால்களுக்கு
நேரம் இருந்தது
உனக்காக
காத்திருக்க...

என் கண்களுக்கு
நேரம் இருந்தது
உனக்காக கண்ணீர் சிந்த ....

என் இதயத்திற்கு
நேரம் இருந்தது
உன்னை மட்டும் நினைக்க

என் கடிகாரத்துக்கு
நேரம் இருந்தது
நீ எனோடு இருந்த
நேரத்தை கணக்கிட ...

என் இரவுகளுக்கு
நேரம் இருந்தது
உன் அருகாமையை உணர..
கனவில் மட்டும்....

ஆனால்
ஏனோ
உனக்கும் நேரம் இருந்தது
என் காதலை மறுக்க...

-->sahana