Sunday, March 27, 2011

தினம்...

காட்சி பிழையாய் நீ
வானவில்லையும் பட்டாம்பூச்சியாய்
பாவிக்கும் மழலையாய் நான்
நம் கூற்றுகிடையில்
ரசிக்க வந்த ரசிகனாய்...
நிகழ் காலம்...
அரங்கேற்றமோ தினம் .
கைதட்டல் யாருக்கு??

Tuesday, December 14, 2010

Nice one!!

மற்றவரிடம் பழகியதால்
கிடைத்தது கவிதைகள் சில
உன்னுடனான பந்தத்தால்
கூடவே ஒரு வாழ்க்கையும்
புதிதாய்!!!

நுரையீரல் தீண்ட முயற்சித்து
தோற்றுப்போகும் சுவாசக் காற்றாய்
உன் மறுத்தலின் உச்சத்தில்
சிலுவைகளில்
அறையப்பட்டு மீண்டும் நீள்கிறது
எனக்கும் உனக்குமான
காதல் உடன் படிக்கைகள் .!




இறந்த பகலின்
சலனமற்ற பிரேதம் போல
அசைவற்ற இரவு
தனிமையில் காய்கிறது.
நிசப்தத்தில் கருக்கொண்டு
பிரவாகித்த மௌனத்தின் பாடல்
பாடப் பட்டது
பூக்கள் அவிந்த பொழுதின்
முந்தைய கணம் வரை
மறுகணமே பரவத் துவங்கியது
நறுமணமாய் போன பாடலொன்று.


Wednesday, December 8, 2010

அவன்.. அவள்.. அது..

சந்திரனின் வேளை!! மேகங்கள் விண்ணை ஆதிக்கம் செய்து கொண்டிருந்தன..
வீட்டுப்பாடங்கள் புத்தக பை போர்வைக்குள் முடக்கம் கொண்டன..பரபரப்பான தார் சாலைகள் பாலைவனகளாகும் இரவு பொழுது..
ரம்மியமான தென்றல் காரிருளின் மௌனத்தை கிழித்து கொண்டு..மழை மேகங்கள் ஒன்றோடு ஒன்று கைகுலுக்கி குளிர்ந்த காற்றை அறிமுக செய்ய தொடங்கின.. அவனோ அந்நாளின் வரலாற்றை டைரியில் செதுக்கலானான்..ஆண் காற்று ஒன்று திரைசீலையை மெல்லமாய் வருட வெட்கப்பட்ட சீலையோ ஜன்னலருகே ஒளிந்து கொண்டது..இவர்கள் விளையாட்டுக்கு இடையில் சிக்கி கொண்ட மயில்தோகை ஒன்று அவன் அருகில் வந்து அமர்ந்தது!!நினைவுகள் ததும்ப...
பயணகள் பின்னூட்டமாய்.....

அவன் : பகல் மெலிந்த மாலை பொழுது... பேருந்து நிலையத்தில்..
என்றுமில்லாத திருநாளாய் பதுமைகள் கூட்டம்...
ஈர்ப்புவிசை இன்று மட்டும் தன்னிலை மாறி வலது நோக்கி..
காற்றின் வேகம் தாங்காமல் சிறகடித்து கொண்டு இருந்த
மயில்தோகை ஒன்றை பட்டு விரல்கள் தொட்டு விட துரத்தி கொண்டு இருந்தன
20வயது குழந்தை இதுவரை இவள் போல் கண்டதில்லை..
தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது.. தொகைக்கும் குடுத்து வைக்கவில்லை அவள் தொட.நேரம் நகர பேருந்தும் நகர்ந்து வந்தது..கிட்டாமலே தொலைத்து போனால்..பின் முதல் காதல் பரிசாய் ...அது போன்று ஆயிரம்....தொலைத்தது டைரியில் இன்று இவனுடன்..

தென்றல் திரட்டிய மேகங்கள் சாரலாய் தெளித்து
அவள் தூக்கம் கலைத்தது...


அவள்: மழைக்கும் அவள் தொலைபேசிக்கும் சின்னதாய் ஒரு ஒற்றுமை..சாரல் அடித்தால் அவள் தொலைபேசியும் கவனம் ஈர்க்கும்..அவன் அழைப்பு... மழை நின்றாலும் உரையாடல்கள் என்னவோ மறு நாள் காலை வரையில்...இன்று ?

இப்படியாய் நினைவுகள் உரையாடி விவாதித்து தங்களாய் முறையிட்டு வாழ்ந்து விளையாடி கோபித்து போராடி நிலையிழந்து ததும்பி தங்களுக்குளே அடங்கி போயின..

பேய்மழையும் கெர்சித்து ஒடுங்கி போனது.. இறுதி துளி நீராய் தலையைனை நனைத்தபடி உறங்கிப்போனது!!

இரவோடு ஓர் மழைக்காலம்!!!

Friday, October 29, 2010

பிரிவு

பிறப்பில் தாயிடம்
பிரியும் குழந்தைக்கு
பிரிவு
'தன்னை' தந்தது..

மேகத்திலிருந்து பிரிந்த
மழை
மண்ணிருக்கு ஜீவனை தந்தது..

எனினும்
நீ பிரிந்த போது
நானும் பிரிந்தேன்..
மண்ணை விட்டு ..
எனக்கு 'தன்னை' தந்த
தாயின் பாசத்தையும் பிரிந்து...
தொடரும்...

வறுமை

வறுமை
இதன் அர்த்தம்
பிள்ளைகளின் புத்தகத்தில் இல்லை
பிச்சைகாரர்களின் கண்களில்..

வறுமை
அதன் நிறம் சிவப்பாம்
ஒத்துகொள்ள தான் வேண்டும்..
எங்கள் ரத்தத்தை வாங்கும்
நரகாசுரனை...

வறுமையை
போக்கும் பயணத்தில்
எங்கள் விவசாயிகளின்
வறுமை கோட்டை மட்டுமாவது
அழிக்க கொண்டு வாருங்கள்
சிறுதளவு காவிரி தண்ணீரை..

மழை காலம்!!!

கவிதை எழுத முற்பட்டேன்!! எனினும் கவித்துவம் கருணை காட்டவில்லை....
"கவிதையா???" கேட்டு முடிப்பதற்குள் , " நீ என்னோடு இருக்க போகும் இந்த சில நிமிடங்கள் தான் கவிதையாக போகிறது!! " என்றாய்... AI class in algorithm போல புரியாமல் கடந்தேன்..மனதை மயக்கும் வேளை!!! வீதி எங்கும் மலரின் ஸ்பரிசம்.. மழை நனைக்காமல் நனைத்து இருந்தது சாலையை... நம்மையும் கூட தான்!! உன் அருகாமை, கொட்டும் மழையில் சிலிர்ப்பூட்டும் icecream போல...விர்ரென்று பறந்தது நாம் சென்ற Hunk... காற்று நம்மை விட வேகமாக!!!எனினும் என்னுள் மட்டும் ஏனோ மயான அமைதி... காரணம் எங்கோ காணாமல்!!! இமைகள் துடிக்க மறந்தன..எண்ணங்கள் நிற்க மறுத்தன!!! பயணமும் தொடர்ந்தது தடுமாற்றங்களுடன்.. " தொடரட்டுமே உன்னுடன் வாழ்க்கை பயணமாயும் . " என்ற என் மௌன உரையாடலுக்கு நடுவே..."இருக்கியா ???? பேசலாமே!!!" மௌனம் என்னை கடந்து சென்றது ஆமோதனையை எனக்கு தந்து விட்டு.. காரணங்கள் இல்லாத தருணங்கள் பல...அவற்றுள் ஒன்றாய் இதுவும்... என எண்ண அலைகள் விண்ணை நோக்கி ஆர்பரிக்க..
"எந்திரிச்சு தொல... மணி ஆகுது..." அம்மா அலாரம் சரியாய் அடித்தது முதுகில் !!!எந்திரிச்சதும் தான் தெரிஞ்சு " வட போச்சே "

Monday, October 18, 2010

இனி...


ஆசைகள் தொலைந்தன...
கண்டெடுக்க இயலவில்லை
ஏக்கங்களாக உருவகித்ததால்..
கால கழுகுகள் தின்று போட்ட
மிச்சமும் எச்சமும்
நினைவுகளாய் உயிர் ஓரத்தில்..
எதிர்பார்ப்புகளை விற்றுவிட
சில துளி கண்ணீரும்
பொய்யாய் சிரிப்புமே விலையாக கிடைத்தன..
நிறுத்த பட்ட ஆசையும்
நிறைவேறாத ஆசையும் என
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
புதைத்து விட்டு..
நான் நானாக
வாழ்வை வந்த படியே எதிர்கொள்ள...