Friday, October 29, 2010

மழை காலம்!!!

கவிதை எழுத முற்பட்டேன்!! எனினும் கவித்துவம் கருணை காட்டவில்லை....
"கவிதையா???" கேட்டு முடிப்பதற்குள் , " நீ என்னோடு இருக்க போகும் இந்த சில நிமிடங்கள் தான் கவிதையாக போகிறது!! " என்றாய்... AI class in algorithm போல புரியாமல் கடந்தேன்..மனதை மயக்கும் வேளை!!! வீதி எங்கும் மலரின் ஸ்பரிசம்.. மழை நனைக்காமல் நனைத்து இருந்தது சாலையை... நம்மையும் கூட தான்!! உன் அருகாமை, கொட்டும் மழையில் சிலிர்ப்பூட்டும் icecream போல...விர்ரென்று பறந்தது நாம் சென்ற Hunk... காற்று நம்மை விட வேகமாக!!!எனினும் என்னுள் மட்டும் ஏனோ மயான அமைதி... காரணம் எங்கோ காணாமல்!!! இமைகள் துடிக்க மறந்தன..எண்ணங்கள் நிற்க மறுத்தன!!! பயணமும் தொடர்ந்தது தடுமாற்றங்களுடன்.. " தொடரட்டுமே உன்னுடன் வாழ்க்கை பயணமாயும் . " என்ற என் மௌன உரையாடலுக்கு நடுவே..."இருக்கியா ???? பேசலாமே!!!" மௌனம் என்னை கடந்து சென்றது ஆமோதனையை எனக்கு தந்து விட்டு.. காரணங்கள் இல்லாத தருணங்கள் பல...அவற்றுள் ஒன்றாய் இதுவும்... என எண்ண அலைகள் விண்ணை நோக்கி ஆர்பரிக்க..
"எந்திரிச்சு தொல... மணி ஆகுது..." அம்மா அலாரம் சரியாய் அடித்தது முதுகில் !!!எந்திரிச்சதும் தான் தெரிஞ்சு " வட போச்சே "

2 comments:

  1. hmmm elaaammm okkkkkkkkkkkkkkk but antha bike aa ootunavanga yaaruuuuuu???!!! atha sollalaiyeee?!?;-)

    ReplyDelete