Wednesday, December 23, 2009

உன் நினைவுகள்...

உன்னோடு என் நாட்கள்..
ரோஜாவின் நறுமணமாய் மணம் வீசின...
ஆனால்..
இன்று..உன் நினைவுகள்...
சருகுகளாய்.. என் டைரியில்..

நம் சந்திப்பு..






மாலை
எனை மயங்கடித்து
கொண்டு இருந்த வேளை..
தண்ட வாளத்தின்
எதிர் எதிர் கோடுகளை போல...
நம் பயணம்..

களையிழந்த முகம்...
கலைந்த கூந்தல்..
இருபினும் அவள் அழகி தான்..
அவனுக்கு..

தனை கவர்ந்த
காந்தம் இல்லை கண்களில்..
எனினும் அவள் பார்வை தான்...
அந்த சில நிமிடங்கள்.. தான்.
அவன் முழுதாய் வாழ்ந்ததாய்
உணர செய்தது..

உழைப்பின் அசதியா ??
கல்வியின் செழுமையா??
அதனை களைப்பு
அந்த கண்களில்...

இவையெல்லாம் வெள்ளமாய்
எண்ணத்தில் பாய...
அவளை பார்த்த படியே...

நெடுக செல்லும் சாலையில்..
அவன் வீடு மட்டும் ஏன்
இவ்வளவு அருகில்??

அந்நாளின் கடைசி பார்வையை
நிமிடங்களை சுமையாக்க
இனி எப்படி?? முடியுமா??
என்ற ஏக்கங்களின்...
கடைசி பக்கத்தில்...
இருந்த போது...

அண்ணா...
என்று சத்தம் போட்ட
பக்கத்து வீடு குழந்தை...
கையில் அள்ளிய படி...
பார்வையை அவள் போகும் திசையில்
தொலைத்து விட்டு.....


----->sahana

Tuesday, December 22, 2009

நாளிதழ்




தினமும் காலையில் எழுந்தவுடன்
உன் முகம் காண்கிறேன்
சூரியனுக்கு முன்

உன்னிலோ பலமுகங்கள்
பலரது மோக மூடிகளை கிழிப்பவன் நீ
காலையில் நம்நாட்டு செய்தியை
கைக்குள் தரும் புது டெக்னாலஜி
மாலையிலும் வருவாய் என்னை தேடி

நீ லஞ்சத்தை பற்றி எழுதினாய்
உத்வேகம் பிறந்தது...
பஞ்சத்தை பற்றி எழுதினாய்
வழி பிறந்தது...
ஆனால்...
பிறர் மஞ்சத்தை பற்றியுமா
எழுத வேண்டும்???
வரன்முறை தேவை உனக்கு...

பளிங்காய் மாறு
நியாயம் முன் நின்றால் மட்டும்
எனினும் ...
அநியாயத்தின் கோர முகத்தையும்
காட்ட மறக்காதே!!

உன் நியாய தராசுகள்
எப்பொழுதும் சமமாகவே இருக்கட்டும்..
லஞ்ச மூடைகளை அதனுள் ஏற்றி விடாதே..!!
நாடும் நாமும் சரிந்து போவோம்!!

உன் பேனாவின் கூர்மையால்
இளையகியம் தீட்டு..
"இலக்கியா" க்களை அல்ல...
பெண்கள் கான சித்திரங்கள்
ரசிக்க மட்டும் தான்..
வருணிக்க அல்ல...

---->sahana