
தினமும் காலையில் எழுந்தவுடன்
உன் முகம் காண்கிறேன்
சூரியனுக்கு முன்
உன்னிலோ பலமுகங்கள்
பலரது மோக மூடிகளை கிழிப்பவன் நீ
காலையில் நம்நாட்டு செய்தியை
கைக்குள் தரும் புது டெக்னாலஜி
மாலையிலும் வருவாய் என்னை தேடி
நீ லஞ்சத்தை பற்றி எழுதினாய்
உத்வேகம் பிறந்தது...
பஞ்சத்தை பற்றி எழுதினாய்
வழி பிறந்தது...
ஆனால்...
பிறர் மஞ்சத்தை பற்றியுமா
எழுத வேண்டும்???
வரன்முறை தேவை உனக்கு...
பளிங்காய் மாறு
நியாயம் முன் நின்றால் மட்டும்
எனினும் ...
அநியாயத்தின் கோர முகத்தையும்
காட்ட மறக்காதே!!
உன் நியாய தராசுகள்
எப்பொழுதும் சமமாகவே இருக்கட்டும்..
லஞ்ச மூடைகளை அதனுள் ஏற்றி விடாதே..!!
நாடும் நாமும் சரிந்து போவோம்!!
உன் பேனாவின் கூர்மையால்
இளையகியம் தீட்டு..
"இலக்கியா" க்களை அல்ல...
பெண்கள் கான சித்திரங்கள்
ரசிக்க மட்டும் தான்..
வருணிக்க அல்ல...
---->sahana
No comments:
Post a Comment