
Tribute to tamills in srilanka..
இது கவிதை அல்ல ....
கவர பட்டு படித்து ரசிக்க .....
கடிதமும் அல்ல..
நலம் விசாரித்து ...
நேசத்தை பரிமாறி கொள்ள..
பிணம் தின்னி கழுகுகள்
மிச்சம் விட்டு வைத்திருக்கும் ...
பிண்டங்கள் தாங்கள் வாழ்ந்ததை
பதிக்கும் பதிவேடு..
"இளகிய மனம் படைத்தோர்
இக்காட்சியை பார்ப்பதை தவிர்க்கவும்... "
என்று ஒளிபரப்ப படும் வாசகமாய்...
தினமும் எங்கள் வாழ்கை அரம்கேரி கொண்டு இருக்கிறது .....
குண்டு வீச்சுகளின் புகைகளின் மத்தியில் காலையை தேடியே படியே..
குடிக்கும் நீரை பெற ...
நீண்ட நெடும் வரிசை ...
அந்த தண்ணீர் பந்தல்
எங்கள் உயிரை குடித்தே... வயிறு வளர்த்தது ...
எங்கள் காலை உணவு
கதறி அழும் பச்சிளம் பிள்ளையின் அழு குரல் ...
தேங்கி கிடக்கும் குருதி வெள்ளம்..
அடுத்த நிமிடம் என் சொந்தமா??? என்ற
ஏக்க பார்வை...
என்று?? தீரும் என் நடை.. என்று கெஞ்சி
நிற்கும் கால்கள்..
பிணங்களை தூக்கி போடாத நாளை
கேட்டு நிற்கும் கைகள்..
இவைகள் மட்டும் தான்...
புன்னகையை எங்கோ பார்த்த நியாபகம் ...
சிந்தித்து பார்த்தேன்..
இறந்து விட்டதாய்...
நினைத்த
தந்தையை..
கண்டதும்.. கட்டி அனைத்த போது...
எங்கள் செடிகள் பூக்கள் பூப்பதையே...
மறந்து போயின...
அன்று பிறந்து அன்றே இறந்து போன பச்சீளம்...
பிள்ளையின்.. நிலை கண்டு..
இங்கு...
பலருக்கு... வேலை.. இல்லை..
பிணங்கள்.. அந்த.. வேலையை பார்ப்பதால்...
கால்களை.. இடரும் வேலை இல்லாத... கற்கள்..
துணிகள் எல்லாம் காயங்களில் கட்டப்பட்டு
இருப்பதால்..
வேலையை இழந்த... நெசவாளி..
இறந்த.. உடல்கள் மண்ணுக்கு உறமாவதால் ....
தன் வேலையை இழந்த... வெட்டியான்...
சில்லா நேரங்களில் பலரின் இதயமும்
தன் வேலையை இழந்து விடுகிறது ...
ஒரே ஒரு ஆசை தான்...
கல்வி கூட வேண்டம்...
உயிர்களை... குண்டு துளைக்காத ..
இடத்தில் புதைக்கும் தொழில் நுட்பம்..
கற்று கொள்ள..
சாதித்தது.. ஒன்று தான்...
செத்து . . கிடக்கும் ..உடல்களை..
செடி மறைவில் ஒளிந்து பார்த்தது..
ஒன்று தான்...
கேட்பதும் ஒன்று தான்...
இறப்பு..இல்லாத...வாழ்வு..அல்ல
வெறும்.. 5 நிமிட அமைதி..
எங்கள் இறப்பிற்கு .. முன்னாவது .....
No comments:
Post a Comment