Friday, August 28, 2009

முதல் காதல் !!

.

அன்று தான்
கண்டேன்
வெள்ளை மேகங்களில்
இரவு மிதந்து செல்வதை
உன் கண்களில் ....

உன்னை பார்த்த நொடியில்
புதிதாய் பிறக்க வில்லை ...
இறந்து மீண்டும் பிறந்தேன்..

அமாவாசை இருட்டில்
நிலவு தெரிந்தது ....
சுட்டெரிக்கும் வெயிலில்
பனி துளி கண்டேன்..

புதிராய் வாழ்கை ..
நிதானமாய் நிலை கொலைத்ததது ...

பிறகு என்ன ...
உன்னை சுற்றியே என் பின்பம் ....
உன் மந்திர பார்வையில் ....
மாதங்கள் களித்தேன் ....

நீ தான் என்னவள் ... என்ற வியப்பு ...
நான் தான் உன்னுடயவனா? என்ற தவிப்பு...
தவிப்புகள் தொடர்ந்தன தினமும்..
அன்று மட்டும் என்னவோ..
உன் பார்வையில் புதிய பரிணாமம் ..
பார்வை சாரலை வீசி விட்டு ... மறைந்து கொண்டு இருந்தாய் ....

உன் பார்வையில் இருந்து மீண்டு
கொன்றுந்தேன்..
எட்ட சென்று...
புன்னகைத்த நொடியில்
உணர வைத்தாய் ...நம்.. காதலை...

கண்களால் காதல்
சொன்னதினாலோ??? ஒரு நாள்
என்னை குருடனாக்கி ....
விலகி சென்றாய்...

காதல் பொய்த்து போனது உண்மை தான்
உன் காதல் மட்டுமே..
என் காதல் மாறாமல் இன்னமும் ....
ஒரு ஓரத்தில் பூத்து கொண்டு தான்...
முதலில் கிடைத்த பார்வை...
அனுபவம்...
முதல்.. கனவு...
பார்க்கும்.. இடம் எல்லாம் அவள்...
நான் தேர்ந்து எடுத்த முதல் பெண் ....
முதல் காதலி...
.முதல் காதல் ... வாழ்வில் என்றும்...
மறக்காது...
தோற்றாலும்.....
நினைவுகளில் ...
மலர்ந்து கொண்டு தான் இருப்பாள்...
என் டைரியில் எங்கோ ஒரு ஓரத்தில் அவள்..
பெயரின் கடைசி வார்த்தை ஆகிலும்...
இருந்து கொண்டு தான்,,.. இருக்கும்...
என் எண்பது வயதிலும் ....
---sahana

No comments:

Post a Comment