எல்லோரும் அமர்ந்திருக்கும்
அந்தக்கூட்டத்தில்
என்னை மட்டும்
பார்த்துக்கொண்டிருந்தன
அந்த இருவிழிகள்.
தனக்கான பார்வையை
என்னிடமிருந்து
எதிர்பார்த்து காத்திருந்த
அந்த விழிகளை
கடைசிவரை பார்க்காமல்
வெகு இயல்பாய்
தவிர்த்தேன்.
எல்லோரும் கலைந்து
சென்றனர்.
வருடங்கள் பல
கழிந்தபின்னரும்
இமைமூடி பார்த்துக்கொண்டே
இருக்கிறேன் அன்று
தவிர்த்த அந்தவிழிகளை.
Gr8888... chanceee eh ila..
ReplyDelete