
நீ ஏற்படுத்தி போன
செல்ல நினைவுகள்
என் மனமேட்டில்
பாத சுவடுகளாய்
சத்தமிலாத சித்திரங்கள் போல..
என் ஜன்னல் ஓர பேருந்து பயணங்கள்
உன் நினைவுகளை என்
நியாபக அறையில் வந்து
தாழிட்டு செல்கின்றன!!!
நீண்ட மௌன நேரங்கள்
அனைத்தும்
நொடிக்கு ஒரு முறை
உன் பெயரையே
உரைத்து நகர்கின்றன
என் காதோரமாய்...
ஏன்
இயற்கையின் இயல்பான மழைத்துளிகள் கூட
நீ இட்ட முத்தத்திற்கே
போட்டியாய் நிற்கின்றன :)
இயற்கையும்
இயல்புமே
எனகேதிறாய்
செயல் பட...
நான் எங்கணம்
உன் நினைவை தடுக்க ...
சிறைபட்டே
கிடக்கட்டும்
உன் சிங்கார நினைவுகள்...
---- சஹானா
Like!
ReplyDelete