
இருளலூருக்கு வழியை தேடி
அனைவரும் கனவு பயணத்தை தொடர
நான் மட்டும் விழி அறையை
திறந்து கொண்டு
நினைவு படுக்கையில் தலை சாய்க்க
தருணம் தேடி கொண்டு இருந்தேன்....
அன்று தான் ஏனோ
நிலவும் உரையாட எண்ணி
என் அருகில் வந்து அமர்ந்தது
நிலவு... நான்.. நீ....
என் நினைவுகளில்!!!
என சுகமாய் பூத்திருந்தது என் அறை....
இரவும் மினுமினுக்கும் நட்சத்திரமும்
உன் கண்களை நினைவுட்ட...
நிலவையும் மறந்து நான்...
காதல் இயற்கையை கூட பிலையாகிற்று :)
எங்கிருந்தோ இசைந்த பாடல்
ஈரக்காற்றில் இதமாய்..
எனினும் நான் என் காதோரம்
உணர்ந்த உன் மூச்சு காற்று...
இன்றும் மெட்டு மாறாமல் நினைவூட்ட...
கரைய தொடங்கிய இரவில்
கறந்து போனது நானும் தான்!!
இறுதியில்
நினைவுகள் உலுக்க
நம் உலகில் உலாவி கொன்று இருந்தேன் நினைவில்...
அறையிலோ...
நிலவு என்னை உறங்க வைத்த களிப்புடன்
மேகத்தோடு கரம் கொண்டு நகர்ந்தது...
நானும் சில மணித்துளிகளில்
துயில்லூருக்கு பயணப்பட்டேன்...
உன் நியாபக பாதையில்...
- சஹானா
காத்திருப்பதும் சுகம் தான்!!
ReplyDeleteஅந்த ஓர் இரவுக்காக!!