Monday, October 18, 2010

இனி...


ஆசைகள் தொலைந்தன...
கண்டெடுக்க இயலவில்லை
ஏக்கங்களாக உருவகித்ததால்..
கால கழுகுகள் தின்று போட்ட
மிச்சமும் எச்சமும்
நினைவுகளாய் உயிர் ஓரத்தில்..
எதிர்பார்ப்புகளை விற்றுவிட
சில துளி கண்ணீரும்
பொய்யாய் சிரிப்புமே விலையாக கிடைத்தன..
நிறுத்த பட்ட ஆசையும்
நிறைவேறாத ஆசையும் என
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
புதைத்து விட்டு..
நான் நானாக
வாழ்வை வந்த படியே எதிர்கொள்ள...

1 comment: