Tuesday, December 14, 2010

Nice one!!

மற்றவரிடம் பழகியதால்
கிடைத்தது கவிதைகள் சில
உன்னுடனான பந்தத்தால்
கூடவே ஒரு வாழ்க்கையும்
புதிதாய்!!!

நுரையீரல் தீண்ட முயற்சித்து
தோற்றுப்போகும் சுவாசக் காற்றாய்
உன் மறுத்தலின் உச்சத்தில்
சிலுவைகளில்
அறையப்பட்டு மீண்டும் நீள்கிறது
எனக்கும் உனக்குமான
காதல் உடன் படிக்கைகள் .!




இறந்த பகலின்
சலனமற்ற பிரேதம் போல
அசைவற்ற இரவு
தனிமையில் காய்கிறது.
நிசப்தத்தில் கருக்கொண்டு
பிரவாகித்த மௌனத்தின் பாடல்
பாடப் பட்டது
பூக்கள் அவிந்த பொழுதின்
முந்தைய கணம் வரை
மறுகணமே பரவத் துவங்கியது
நறுமணமாய் போன பாடலொன்று.


Wednesday, December 8, 2010

அவன்.. அவள்.. அது..

சந்திரனின் வேளை!! மேகங்கள் விண்ணை ஆதிக்கம் செய்து கொண்டிருந்தன..
வீட்டுப்பாடங்கள் புத்தக பை போர்வைக்குள் முடக்கம் கொண்டன..பரபரப்பான தார் சாலைகள் பாலைவனகளாகும் இரவு பொழுது..
ரம்மியமான தென்றல் காரிருளின் மௌனத்தை கிழித்து கொண்டு..மழை மேகங்கள் ஒன்றோடு ஒன்று கைகுலுக்கி குளிர்ந்த காற்றை அறிமுக செய்ய தொடங்கின.. அவனோ அந்நாளின் வரலாற்றை டைரியில் செதுக்கலானான்..ஆண் காற்று ஒன்று திரைசீலையை மெல்லமாய் வருட வெட்கப்பட்ட சீலையோ ஜன்னலருகே ஒளிந்து கொண்டது..இவர்கள் விளையாட்டுக்கு இடையில் சிக்கி கொண்ட மயில்தோகை ஒன்று அவன் அருகில் வந்து அமர்ந்தது!!நினைவுகள் ததும்ப...
பயணகள் பின்னூட்டமாய்.....

அவன் : பகல் மெலிந்த மாலை பொழுது... பேருந்து நிலையத்தில்..
என்றுமில்லாத திருநாளாய் பதுமைகள் கூட்டம்...
ஈர்ப்புவிசை இன்று மட்டும் தன்னிலை மாறி வலது நோக்கி..
காற்றின் வேகம் தாங்காமல் சிறகடித்து கொண்டு இருந்த
மயில்தோகை ஒன்றை பட்டு விரல்கள் தொட்டு விட துரத்தி கொண்டு இருந்தன
20வயது குழந்தை இதுவரை இவள் போல் கண்டதில்லை..
தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது.. தொகைக்கும் குடுத்து வைக்கவில்லை அவள் தொட.நேரம் நகர பேருந்தும் நகர்ந்து வந்தது..கிட்டாமலே தொலைத்து போனால்..பின் முதல் காதல் பரிசாய் ...அது போன்று ஆயிரம்....தொலைத்தது டைரியில் இன்று இவனுடன்..

தென்றல் திரட்டிய மேகங்கள் சாரலாய் தெளித்து
அவள் தூக்கம் கலைத்தது...


அவள்: மழைக்கும் அவள் தொலைபேசிக்கும் சின்னதாய் ஒரு ஒற்றுமை..சாரல் அடித்தால் அவள் தொலைபேசியும் கவனம் ஈர்க்கும்..அவன் அழைப்பு... மழை நின்றாலும் உரையாடல்கள் என்னவோ மறு நாள் காலை வரையில்...இன்று ?

இப்படியாய் நினைவுகள் உரையாடி விவாதித்து தங்களாய் முறையிட்டு வாழ்ந்து விளையாடி கோபித்து போராடி நிலையிழந்து ததும்பி தங்களுக்குளே அடங்கி போயின..

பேய்மழையும் கெர்சித்து ஒடுங்கி போனது.. இறுதி துளி நீராய் தலையைனை நனைத்தபடி உறங்கிப்போனது!!

இரவோடு ஓர் மழைக்காலம்!!!

Friday, October 29, 2010

பிரிவு

பிறப்பில் தாயிடம்
பிரியும் குழந்தைக்கு
பிரிவு
'தன்னை' தந்தது..

மேகத்திலிருந்து பிரிந்த
மழை
மண்ணிருக்கு ஜீவனை தந்தது..

எனினும்
நீ பிரிந்த போது
நானும் பிரிந்தேன்..
மண்ணை விட்டு ..
எனக்கு 'தன்னை' தந்த
தாயின் பாசத்தையும் பிரிந்து...
தொடரும்...

வறுமை

வறுமை
இதன் அர்த்தம்
பிள்ளைகளின் புத்தகத்தில் இல்லை
பிச்சைகாரர்களின் கண்களில்..

வறுமை
அதன் நிறம் சிவப்பாம்
ஒத்துகொள்ள தான் வேண்டும்..
எங்கள் ரத்தத்தை வாங்கும்
நரகாசுரனை...

வறுமையை
போக்கும் பயணத்தில்
எங்கள் விவசாயிகளின்
வறுமை கோட்டை மட்டுமாவது
அழிக்க கொண்டு வாருங்கள்
சிறுதளவு காவிரி தண்ணீரை..

மழை காலம்!!!

கவிதை எழுத முற்பட்டேன்!! எனினும் கவித்துவம் கருணை காட்டவில்லை....
"கவிதையா???" கேட்டு முடிப்பதற்குள் , " நீ என்னோடு இருக்க போகும் இந்த சில நிமிடங்கள் தான் கவிதையாக போகிறது!! " என்றாய்... AI class in algorithm போல புரியாமல் கடந்தேன்..மனதை மயக்கும் வேளை!!! வீதி எங்கும் மலரின் ஸ்பரிசம்.. மழை நனைக்காமல் நனைத்து இருந்தது சாலையை... நம்மையும் கூட தான்!! உன் அருகாமை, கொட்டும் மழையில் சிலிர்ப்பூட்டும் icecream போல...விர்ரென்று பறந்தது நாம் சென்ற Hunk... காற்று நம்மை விட வேகமாக!!!எனினும் என்னுள் மட்டும் ஏனோ மயான அமைதி... காரணம் எங்கோ காணாமல்!!! இமைகள் துடிக்க மறந்தன..எண்ணங்கள் நிற்க மறுத்தன!!! பயணமும் தொடர்ந்தது தடுமாற்றங்களுடன்.. " தொடரட்டுமே உன்னுடன் வாழ்க்கை பயணமாயும் . " என்ற என் மௌன உரையாடலுக்கு நடுவே..."இருக்கியா ???? பேசலாமே!!!" மௌனம் என்னை கடந்து சென்றது ஆமோதனையை எனக்கு தந்து விட்டு.. காரணங்கள் இல்லாத தருணங்கள் பல...அவற்றுள் ஒன்றாய் இதுவும்... என எண்ண அலைகள் விண்ணை நோக்கி ஆர்பரிக்க..
"எந்திரிச்சு தொல... மணி ஆகுது..." அம்மா அலாரம் சரியாய் அடித்தது முதுகில் !!!எந்திரிச்சதும் தான் தெரிஞ்சு " வட போச்சே "

Monday, October 18, 2010

இனி...


ஆசைகள் தொலைந்தன...
கண்டெடுக்க இயலவில்லை
ஏக்கங்களாக உருவகித்ததால்..
கால கழுகுகள் தின்று போட்ட
மிச்சமும் எச்சமும்
நினைவுகளாய் உயிர் ஓரத்தில்..
எதிர்பார்ப்புகளை விற்றுவிட
சில துளி கண்ணீரும்
பொய்யாய் சிரிப்புமே விலையாக கிடைத்தன..
நிறுத்த பட்ட ஆசையும்
நிறைவேறாத ஆசையும் என
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
புதைத்து விட்டு..
நான் நானாக
வாழ்வை வந்த படியே எதிர்கொள்ள...

Friday, October 1, 2010

தலைப்பு???






தண்ணீருக்கு வண்ணம் கொடுக்க...
நிலவையும் தூரலையும் ஒன்றாய் புகைபடம் எடுக்க...
தாஜ்மஹாலில் குடி ஏற...
காற்றும் சலங்கை அணிய...
மீசை இல்லா பாரதி பார்க்க..
கண்ணுக்குள்ளேயே கண்ணீர் அடங்க...
பிறந்ததும் குழந்தை தமிழில் பேச..
திருவள்ளுவனை எழுப்பி அவன் குரல் கேட்க..
கண்களுக்கும் பாஷை கற்று கொடுக்க...
குடைகளே இல்லாத உலகம் அமைக்க...
நினைத்தால் மறுபடியும் மழலையாக..
கனவுக்கெல்லாம் கைவிரல் கொடுக்க..
காதலுக்கும் கால நிர்ணயம் விதிக்க..
பிரிவுகள் இல்லா உறவுகள் அமைய..
அவன் குரலில் என் காதல் கேட்க..
ஆசை!!??!!!


-சஹானா.

Monday, August 30, 2010

எங்கணம் தவிர்க்க??????






நீ ஏற்படுத்தி போன
செல்ல நினைவுகள்
என் மனமேட்டில்
பாத சுவடுகளாய்
சத்தமிலாத சித்திரங்கள் போல..

என் ஜன்னல் ஓர பேருந்து பயணங்கள்
உன் நினைவுகளை என்
நியாபக அறையில் வந்து
தாழிட்டு செல்கின்றன!!!

நீண்ட மௌன நேரங்கள்
அனைத்தும்
நொடிக்கு ஒரு முறை
உன் பெயரையே
உரைத்து நகர்கின்றன
என் காதோரமாய்...

ஏன்
இயற்கையின் இயல்பான மழைத்துளிகள் கூட
நீ இட்ட முத்தத்திற்கே
போட்டியாய் நிற்கின்றன :)

இயற்கையும்
இயல்புமே
எனகேதிறாய்
செயல் பட...
நான் எங்கணம்
உன் நினைவை தடுக்க ...
சிறைபட்டே
கிடக்கட்டும்
உன் சிங்கார நினைவுகள்...

---- சஹானா

Tuesday, August 24, 2010

????????

அவன் சந்தோஷம்
ஒன்றே என் காதலின்
அர்த்தமாக இருந்தது அன்று..
இன்றோ சற்று வித்தியாசமாக..
சந்தோஷத்தின் துணையாக..
கண்ணீரும்..
சந்தோஷம்..அவன் உள்ளத்தில்..
கண்ணீர் கரை என் உள்ளத்தில்..
காதல்- காணவில்லை..


--->தோழியின் கவிதை

Saturday, August 21, 2010

ஓர் இரவு !!





இருளலூருக்கு வழியை தேடி
அனைவரும் கனவு பயணத்தை தொடர
நான் மட்டும் விழி அறையை
திறந்து கொண்டு
நினைவு படுக்கையில் தலை சாய்க்க
தருணம் தேடி கொண்டு இருந்தேன்....
அன்று தான் ஏனோ
நிலவும் உரையாட எண்ணி
என் அருகில் வந்து அமர்ந்தது
நிலவு... நான்.. நீ....
என் நினைவுகளில்!!!
என சுகமாய் பூத்திருந்தது என் அறை....

இரவும் மினுமினுக்கும் நட்சத்திரமும்
உன் கண்களை நினைவுட்ட...
நிலவையும் மறந்து நான்...
காதல் இயற்கையை கூட பிலையாகிற்று :)
எங்கிருந்தோ இசைந்த பாடல்
ஈரக்காற்றில் இதமாய்..
எனினும் நான் என் காதோரம்
உணர்ந்த உன் மூச்சு காற்று...
இன்றும் மெட்டு மாறாமல் நினைவூட்ட...

கரைய தொடங்கிய இரவில்
கறந்து போனது நானும் தான்!!
இறுதியில்
நினைவுகள் உலுக்க
நம் உலகில் உலாவி கொன்று இருந்தேன் நினைவில்...
அறையிலோ...
நிலவு என்னை உறங்க வைத்த களிப்புடன்
மேகத்தோடு கரம் கொண்டு நகர்ந்தது...
நானும் சில மணித்துளிகளில்
துயில்லூருக்கு பயணப்பட்டேன்...
உன் நியாபக பாதையில்...
- சஹானா

Sunday, June 27, 2010

எப்போது ????





மௌனத்திற்கு கூட உருவம் வடித்தது
உன் உறவு
ஆனால் இன்று ஏனோ
மௌனம் மட்டுமே என்னுடன்
உரையாடி நகர்கிறது
நீ??

Sunday, May 30, 2010

MISS YOUUUUUUUUU!!!!!!!!!!






சில நாட்கள் மட்டும்
சருகாய் இரு ....பின்
மலர்ந்து கொள்ளலாம் என்று
கூறி....விடை கொடுத்து சென்றாய்...
உன் மலருக்கு....

அதுவும் சிரித்துகொண்டே
சொன்னது....
நிஜத்தில் ஓயவேடுதாலும்
நினைவுகளில் உன் மடி சாய்ந்திருப்பேன் என்று......



----->Sahana

Wednesday, January 6, 2010

நம்மில் நாம்....






நீல வானிலும் உனது பின்பம்!!
முதல் நொடி....
சூறாவளி கூட சுகமான தென்றலாய்!!
இரண்டாம் நொடி...
இரண்டடி வெண்பாவும்
முழு நீல கட்டுரையை!!
மூன்றாம் நொடி...
மேகங்களின் கால்களில்
மழை துளி கெஞ்சுவது போல உன் அழகில் நான்.!!.
நான்காம் நொடி....
என் இரு பாதங்கள்
நிலவில் பதித்தது போல!!
ஐந்தாம் நொடி...
இவை யாவும் நாம் இணைந்து
சென்ற அந்த தண்ட வாள தெருவில்
என்னுள் மொழி பெயர்ந்தன அந்த ஐந்து வினாடியில்....

-->sahana

உன்னை மறக்க .....





அவள் உனதில்லை
நீ எனது இல்லை...
என பல ஆயிரம்
முறைகள் எனை திருத்தியும்
என் சொற்களில் படிந்து போன
உன் நினைவுகள்..


உன் கண்களில்
மோதி விட கூடாது
என்று எவ்வளவு முயன்றாலும்
இருனதியில் சரணடைவது என்னவோ
உன் விழி ஆலயத்தில் தான்..

குப்பைக்கு சென்றாலும்
மணம் வீசும் பூவை போல நானும்...
விதி யாரை விட்டது..
எனினும்
உன் விழி உன்னை விடாது..

உன் பேர் சொல்ல ஆசை தான்..
ஊருக்கெல்லாம் மேடை போட்டு அல்ல..
எனக்கே கேட்காமல்....
செல்லமாய் ...
ரகசியமாய்...

உன் தோள்களில் தேய ஆசை தான்...
வாழ்நாள் முழுக்க அல்ல...
என் கண்ணீரின் முதல் சொட்டு
உன்னை நனைக்கும் வரை மட்டுமாவது..
இவைகளுக்கு பிறகும்
எங்கனம் உன்னை மறக்க?????

-->sahana

ஆசைப்பட்டேன்..




காலையில்
துயில் எழும்போது
என் அருகில்
உன் முகம் காண ஆசைப்பட்டேன்..

சடை பின்னி
போட்டு இட்டு
உன் கண்கள் சொல்லும்
விமர்சனம் கேட்க
ஆசைப்பட்டேன்....

தனியே வந்தாலும்
என் தோள்களில்
உன் கைகள் இருக்க
ஆசைப்பட்டேன்....

வந்து செல்லும்
கடல் அலையை
உன் தோல் சாய்ந்து ரசிக்க
ஆசைப்பட்டேன்...

முட்டி கொண்டு
அழுதாலும்
உன் மார்பில் மோதி அழ
ஆசைப்பட்டேன்...

என்னை எனக்காக
ஏற்று காதலிக்க
அவன் எங்கே ?????

புதிர் தான் நீ..

அமாவாசை இருட்டில்
கூட
உன் கண்களை என்னால்
கண்டறிய கூடும்...
என் அன்பே...!
உன் இதய செய்திகளை
மட்டும் ஏனோ
கண்டு கொள்ள இயலவில்லை!!


--sahana

நேரம் இருந்தது !!!








என் விரல்களுக்கு
நேரம் இருந்தது
உன்னை பற்றி
புகழ...

என் கால்களுக்கு
நேரம் இருந்தது
உனக்காக
காத்திருக்க...

என் கண்களுக்கு
நேரம் இருந்தது
உனக்காக கண்ணீர் சிந்த ....

என் இதயத்திற்கு
நேரம் இருந்தது
உன்னை மட்டும் நினைக்க

என் கடிகாரத்துக்கு
நேரம் இருந்தது
நீ எனோடு இருந்த
நேரத்தை கணக்கிட ...

என் இரவுகளுக்கு
நேரம் இருந்தது
உன் அருகாமையை உணர..
கனவில் மட்டும்....

ஆனால்
ஏனோ
உனக்கும் நேரம் இருந்தது
என் காதலை மறுக்க...

-->sahana